எலுமிச்சையில் வைட்டமின் c சத்து உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அதில்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பது எலுமிச்சையாகும். தற்போது சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சைக்கு உண்டு என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சிறுநீரகத்தை நலமுடன் பராமரிப்பதில் எலுமிச்சையின் செயல்கள் பற்றி அமெரிக்காவின் சான்டியகோவில் உள்ள ஒருங்கிணைந்த சிறுநீரக நலமையத்தின் இயக்குநர் ரோஜர் சர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.ஆய்வில், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுப்பதில் எலுமிச்சை சிறப்பாக செயல்படுகிறது. மற்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களைக் காட்டிலும் எலுமிச்சை நல்ல விதத்தில் செயல்படுவதும் தெரிய வந்துள்ளது.எனவே, தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு, கால்சியம், புரோட்டீன் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்க, எலுமிச்சை சாறு மிகவும் உதவும்.சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க
சிலருக்கு சிறுநீரகக் கல் உருவாகி அதனால் அதிகம் சிரமப்படுவார்கள். சிலருக்கு சிறுநீரகக் கல் உருவாகிவிடுமோ என்ற கவலையிலேயே அதிகம் அவதிப்படுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு இனிய செய்தியாக, எலுமிச்சைக்கு, சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, தினசரி 4 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறை இரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக குடித்து வர வேண்டும்.
இப்படி செய்வதால் சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதற்கான வாய்ப்பு 1 புள்ளியில் இருந்து 0.13 புள்ளியாகக் குறைவது தெரிய வந்துள்ளது.
எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலம் அதிக அளவில் உள்ளது. இதுதான் சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் பாதுகாக்கிறது. மேலும், உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரகக் கல் உருவாவதில் அதிக பங்கு வகிக்கிறது.
எனவே உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதைத் தவிர்க்க முடியும்.
Leave a comment